Thursday, May 20, 2010

சிங்கள ராணுவத்திடம் சிக்கி சிதைந்த தமிழர்கள்- அம்பலப்படுத்திய சேனல் 4

ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் தங்களிடம் சிக்கிய தமிழர்களை ஈவு இரக்கமின்றி சித்திரவதை செய்த சிங்கள ராணுவத்தின் இனவெறியாட்டத்தை வெளியுலகுக்கு அம்பலப்படுத்துவதாக உள்ளது சேனல் 4 தொலைக்காட்சி சமீபத்தில் வெளியிட்ட வீடியோ காட்சிகள்.
ஹிட்லர் காலத்தில் யூதர்கள் சந்தித்த பேரவலத்திற்கு சற்றும் குறையாத கொடூரத்தை ஈழத் தமிழர்கள் சந்தித்துள்ளனர். இது வெளியுலகுக்கு தெரியாமல் புதைந்து போயிருந்தாலும், மேற்கத்திய மீடியாக்களால் இது அவ்வப்போது வெளியே கொண்டு வரப்பட்டு, ஈழத்தில் டந்து முடிந்து போன ஒரு மிகப் பெரிய மனிதப் பேரவலத்தை வெளியுலகம் கண்டு அதிர வைத்து வருகிறது.
லண்டனைச் சேர்ந்த சேனல் 4 தொலைக்காட்சி முன்பு, பிடிபட்ட ஈழத் தமிழ் இளைஞர்களின்கை, கால்களைக் கட்டி பின்னாலிருந்து சிங்கள காடையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லும் பகீர் காட்சிகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது மேலும் ஒரு பகீர் காட்சியை சேனல் 4 வெளியிட்டுள்ளது.
அதில் ஏராளமான தமிழர்களை ஒரு இடத்தில் கைகளை பின்புறமாக கட்டி வைத்து சித்ரவதை செய்யும் காட்சிகள் இடம் பெற்று உள்ளன.



15 வயதுக்கும் உட்பட்ட ஒரு சிறுவனையும் இதே போல கட்டி வைத்து சித்ரவதை செய்கின்றனர்.





இன்னொரு இடத்தில் இளம்பெண்கள் சிலர் மயங்கியபடி கிடக்கின்றனர். அவர்களை ராணுவத்தினர் சித்ரவதை செய்ததில் மயங்கி கிடப்பது போல தெரிகிறது.

இவர்கள் அனைவரையும் சித்ரவதைக்கு பிறகு சிங்கள ராணுவத்தினர் கொன்றிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.

இந்த காட்சிகள் அனைத்தும் ராணுவ வீரர் ஒருவர் செல்போன் மூலம் எடுத்தவை என்று சேனல் 4 கூறியுள்ளது.

சேனல் 4 யின் ஆங்கில கட்டுரை லிங்க்


நன்றி :தட்ஸ்தமிழ்

இதையும் படிங்க :

1. 'மேலிட உத்தரவுப்படி தமிழர்களைக் கொன்று குவித்தோம் ' - சிங்கள தளபதி

2. மே 17

3. மே 17, 18 .....


4. கரிய தினத்தைக் கடந்து போகிறேன் கனத்த மனதோடு

5.
மறந்தால் நாம் தமிழரில்லை...!

6. வெந்த புண்ணில் பிரபாகரனை பாய்ச்ச வேண்டாம்..

7. தமிழீழம் வென்றெடுப்போம்....!